பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தல்கள் முடிவடைந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மக்களை வஞ்சிக்கும் சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தேனியில் சிலிண்டருக்கு மாலை அணிவித்து, ஆட்டோவை கையிறுகட்டி இழுக்கும் போராட்டம் நடைபெற்றது.
அதேபோல் உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு சிலிண்டருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மாலையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.