தென்காசி ,ஜூலை 2- தென்காசி மாவட்டம் திருவேங்கடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர்.பி. சர்க்கரை அவர்கள் (வயது 85) புதன்கிழமையன்று மாலை 5 மணிக்கு காலமானார். இலங்கை இனகலவ ரத்தில் 1958ல் இந்தியாவு க்கு அவரது குடும்பம் வந்தது. 1962ல் இடதுசாரி அரசியலில் ஈர்க்கப்பட்டு 1962ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். இவர் முடி அலங்காரக் கடை நடத்தி வந்தார். அந்த கடைதான் 1998 வரை கட்சி அலுவலகமாக இயங்கியது. மிசா கால கட்டத்தில் 45 நாள் சிறைவாசம் அனுப வித்தார். அன்னாரது உடலுக்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் உ.முத்துபாண்டியன், திருவேங்க டம் தாலுகா செயலாளர் வேணுகோபால், கருப்பசாமி உட்பட பலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மறைந்த அவரின் குடும்பத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நெல்லை மாவட்ட குழு சார்பில் மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.