மன்னார்குடி, ஆக.22- சென்னையில் உள்ள ஜமதி தேவ்கன்வர் நானாலால் பட் வைஷ்ணவ் மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் தோஹா வங்கியின் சி.இ.ஓ சீதாராமன் பேசியதாவது: பாலின சமத்துவம் என்பது பெண்களின் அடிப்படை உரிமை மட்டுமல்ல. அதுதான் உலகின் நீடித்த வளர்ச்சிக்கு அடித்தளம். கல்வி, கண்ணியமான வேலை, பொருளாதார முடிவு எடுப்பதில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் தருவதன் மூலம் மனித குலம் பலனடைகிறது. வறுமை மறைகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இயக்குனர் குழுவில் பெண்கள் இல்லையென்றால் அந்த குழுவில் இருப்போர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டது. ஆட்சி நிர்வாகத்தில் பெண்களுக்கு சமபங்கு இருக்கும் போது நிலையான அமைதியான உலகம் உருவாகிறது. இந்தியாவின் தொழிலாளர் சக்தியில் 29 சத வீதம் பெண்களாக இருக்கிறர்கள். பாலின சமத்துவம் மூலம் இந்தியாவின் தொழிலாளர் பொருளாதாரம் 2025ம் ஆண்டில் 70 ஆயிரம் கோடி டாலர் மதிப்புக்கு உயரும். உழைப்பு சக்தியில் பெண்கள் சமஅளவாக இருக்கும் போது இந்தியாவின் மொத்த உற்பத்தி (ஜிடிபி) 27 சதவீதம் உயரும் என்று ஐஎம்எப் கணித்துள்ளது. 2013ம் ஆண்டின் இந்திய கம்பெனி சட்டத்தில் சிலவகை நிறுவனங்களின் இயக்குனர் பெண்ணாக இருக்க வேண்டும் என்பது கட்டா யமாக்கப்பட்டுள்ளது. பெண்கள் நாட்டின் வளர்ச்சிக்கு மட்டு மல்ல வீட்டின் வளர்ச்சிக்கும் காரணமாக இருக்கிறார்கள். அவர்கள் சம்பளத்தில் 90 சதவீதம் வீட்டுக்குதான் செல வழிக்கிறார்கள் இவ்வாறு அவர் பேசினார்.