tamilnadu

திருவண்ணாமலை, சிவகங்கை, திருநெல்வேலி முக்கிய செய்திகள்

கலை பண்பாட்டு மைய கிளை: நாட்டுப்புற கலைஞர்கள் கோரிக்கை
திருவண்ணாமலை,நவ.4- திருவண்ணாமலை மாவட்டத்தில் கரகாட்டம், தெருக்கூத்து, பம்பை, சிலம்பாட்டம் உள்ளிட்ட கலைகளில், ஆயிரக்கணக்கான நாட்டுப்புற கலைஞர்கள் ஈடுபட்டுள்ள னர். நாட்டுப்புற கலைஞர்கள், அரசின் நாட்டுப்புற நல வாரியத்தில் அடையாள அட்டை பெறவும், நல வாரியத்தில் உறுப்பினராக சேரவும், மேலும், நாட்டுப்புற கலை ஞர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் பெறவும் கலைப்பண்பாட்டு மைய அலுவலகத்திற்கு அடிக்கடி செல்வது வழக்கம். கலைப்பண்பாட்டு மையத்தின் கிளை அலுவலகம், திருவண்ணா மலை மாவட்ட அரசு இசைப்பள்ளியில் செயல்பட்டு வந்தது. தற்போது அந்த கிளை அலுவலகம், காஞ்சிபுரம் தலைமை அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டுப்புற கலைஞர்கள், அலுவலக வேலை தொடர்பாக, அடிக்கடி காஞ்சிபுரம் சென்று வர, மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, கலைப் பண்பாட்டு மைய கிளை அலுவலகத்தை மீண்டும், திருவண்ணாமலை மாவட்ட அரசு இசைப்பள்ளியில் செயல்பட வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கை அடங்கிய மனுவினை மாவட்ட ஆட்சியரிடமும் அளித்துள்ளனர்.

தடைசெய்யப்பட்ட குட்கா பறிமுதல்
திருவண்ணாமலை,நவ.4- திருவண்ணாமலையில் ரூ.10 லட்சம் மதிப்புடைய தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் மூன்று வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தப்பி ஓடிய வாகனங்களின் ஓட்டுநர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை வேட்டவலம் சாலை, பண்டாரக்குட்டை தெருவைச் சேர்ந்த முரளி (39) என்பவரது குடோனுக்கு, பெங்களூரிலிருந்து கடத்திச் சென்ற தடைசெய்யப்பட்ட 49 பெட்டிகள் அடங்கிய சுமார் 10 லட்சம் மதிப்புடைய குட்கா பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அவரிடமிருந்து இரண்டு கார் மற்றும் சரக்கு வேன் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் முரளி கைது செய்யப்பட்டுள்ளார். தப்பி ஓடிய வாகன ஓட்டுனர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.  

சிவகங்கை காவல்துறைக்கு அனைத்துக் கட்சிகள் கண்டனம்
சிவகங்கை, நவ.4- சிவகங்கை பூவந்தியில் காவல்துறையைக்கண்டித்து அனைத்துக்கட்சிகள் சார்பில் பொதுக்கூட்டம் நவம்பர்13-ஆம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பாக அனைத்துக் கட்சிகள் பங்கேற்ற கூட்டம் ஜெயச்சந்திரன் (காங்.) தலைமையில் நடைபெற்றது. சேங்கை மாறன் (திமுக). ஆர்.கே.தண்டியப்பன், அய்யம்பாண்டி. ஜெய ராமன், கருப்பையா, ஈஸ்வரன் ‘(சிபிஎம்), சேகர் (மதிமுக), சுந்தரலிங்கம் (சிபிஐ), கண்ணன் (விசிக), நாகரெத்தினம் (புதிய தமிழகம்) ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில்,  பூவந்தியில் சட்டவிரோத மணல் கொள்ளையைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,  கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் அய்யம்பாண்டி யை கொலை செய்துவிடுவதாக பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புடைய மாயக்கிருஷ்ணன் மிரட்டினார். மாயக்கிருஷ்ணன் மற்றும் அவரைத் தூண்டிவிட்டவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பூவந்தியில் நவம்.13-ஆம் தேதி மாலை பொதுக்கூட்டம் நடத்துவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், குடிமராமத்துப் பணிகள் விவசாயிகள் பங்க ளிப்பின்றி ஆளும் கட்சியினர் ஊழல்- முறைகேடாக செயல் படுத்தி வருகின்றனர். குடிமராமத்துப் பணிகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்புகாவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்புவனம் வாரச் சந்தையை முறையாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

எக்ஸ்பிரஸ் ரயிலில் எழும்பூர் வரை டிக்கெட் வழங்க கோரிக்கை
திருநெல்வேலி, நவ.4-தென்மாவட்ட மக்கள் குறிப்பாக செங்கோட்டை, தென்காசி, சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லி புத்தூர், சிவகாசி, பகுதி மக்கள் சென்னை செல்வதற்கு பொதிகை எக்ஸ்பிரஸ் மற்றும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் களை பெருமளவு பயன்படுத்துகின்றனர். எழும்பூர் ரயில் நிலை யத்தில் பராமரிப்பு பணி காரணமாக இவ்விரண்டு ரயில்களும் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. ஆகவே ரயி லில் பயணிக்க டிக்கெட்களும் தாம்பரம் வரை மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் இந்த ரயிலில் பயணித்து எக்மோர் வரை சென்று இறங்கும் பயணிகள் தாம்பரத்தில் இறங்கி லக்கேஜ் களுடன் படிகளை கடந்து நீண்ட கியூவில் நின்று மின்சார ரயிலுக்கு டிக்கெட் வாங்கி மீண்டும் படி களில் ஏறி இறங்கி அடுத்த மின்சார ரயிலில் செல்ல வேண்டி யுள்ளது. இதனால் பயணிகள் குறிப்பாக முதியவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஆகவே இதில் பயணிக்கும் பயணிகள் நலன் கருதி இந்த ரயில்களில் எழும்பூர் வரை டிக்கெட் எடுத்து தாம்பரத்தில் இறங்கி பின்னால் வரும் ரயி லில் தொடர்ந்து பயணிக்க அனுமதி வழங்க வேண்டும் என வும் இதனால் இதில் பயணிப்போரும் குறிப்பாக முதிய வர்களும், குழந்தைகளுடன் பயணிக்கும் பெண்களும் சிரம மின்றி பயணிக்க வசதியாக இருக்கும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.