திருப்பூர், ஜூன் 12 – திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி பகுதியில் காங்கேயம் சென்னிமலை சாலையில் நால்ரோடு அருகே மின் கம்பம் அமைப்பதற்காக பழமையான மரங் களின் கிளைகளை மின்வாரிய பணி யாளர்கள் வெட்டிச் சாய்த்ததற்கு சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித் துள்ளனர். காங்கேயம் - சென்னிமலை சாலையில் நால்ரோடு அருகில் மின்கம்பம் அமைக்கும் பணிக்கு பல்லாண்டு காலம் வளர்ந்துள்ள புளியன், வேம்பு மரங்களின் கிளைகள் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளன. ஆனால் மின் வாரியம் மரங்களை வெட்டுவதற்கு முறை யான எவ்வித அனுமதியும் பெற்றதாக தெரியவில்லை. வெட்டப்படும் மரங்களை சட்ட விரோதமாக விற்பதால் இந்த முறை கேட்டைப் பற்றி நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் மரங் களை அழிக்கத் துணை போகின்றனர். இயற்கையை அழிக்கும் இந்நடவடிக் கைக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வன்மை யாக கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும்,பழமையான மரங்களை வெட்டாமல் பாதையை மாற்றி அமைத்தோ, கேபிள் மூலமாகவோ மின்திட்டங் களை செயல்படுத்த வேண்டும் என்று தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் கூறியுள்ளார்.