திருப்பூர், ஜூன் 12 – சாலைப் பணியாளர்களின் தொழிற் சங்க கூட்டு பேர உரிமையை கேலிக் குள்ளாக்கி காவல்துறையை ஏவி தாக்குதல் நடத்தும் நெடுஞ்சாலைத் துறை உயர் அதிகாரிகளைக் கண்டித்து திருப்பூரில் சாலைப் பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருப்பூர் காலேஜ் ரோடு கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பாக செவ்வாயன்று மாலை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோட்டத் தலைவர் என்.சிவக்குமாரன் தலைமை வகித்தார். கோட்டத் துணைத் தலைவர் பி.அம்மாசை வரவேற்றார். இதில் சாலைப் பணியாளர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தியும், தொழி லாளர் விரோத அதிகாரிகளைக் கண்டித்தும் கோட்டச் செயலாளர் ஆர்.ராமன் உரை யாற்றினார். இப்போராட்டத்தை வாழ்த்தி சத்துணவு ஊழியர் சங்க மாநகரத் தலைவர் பி.மகேந்திரபூபதி, அரசு ஊழியர் சங்க முன்னாள் துணைத் தலைவர் ஏ.ரோஸ் மேரி, இணைச் செயலாளர் ஏ.ராணி, வணிக வரித் துறை பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.சந்திரசேகர் ஆகியோர் உரை யாற்றினர். இதில் சாலைப் பணியாளர்கள் திரளா னோர் கலந்து கொண்டனர்.