tamilnadu

img

சாலையோர குழிகளை மூடக் கோரிக்கை

அவிநாசி, நவ.13- அவிநாசி அருகே குழாய் கசிவுகளை சீரமைக்க தோண்டப்பட்ட குழிகளால் விபத்து ஏற்படும் முன் குழியை மூடுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவிநாசி ஒன்றியம், கருவலூர் ஊராட்சிக்குட்பட்ட அனந்தகிரி, கருவ லூர் பகுதிகளில் இரண்டாவது குடிநீர் திட்ட குழாயிலிருந்து கசிவுகள் ஏற்பட் டது. இதை சீரமைக்க குழிகள் தோண் டப்பட்டன. இதன்பின் குடிநீர் குழாயில் ஏற்பட்ட கசிவுகள் சீரமைக்கப்பட்டன. இந் நிலையில் இரண்டு மாதங்கள் கடந்த பின் னும் தோண்டப்பட்ட குழிகள் இதுவரை மூடப்படவில்லை. இதனால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.  இதுகுறித்து பொதுமக்கள் கூறுகை யில், கருவலூரில் குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டு சீரமைக்கப்பட்டன. ஆறு மாதங்களுக்கு முன்பு குடிநீர் குழாயில் கசிவு  ஏற்பட்ட பகுதியில் விபத்து ஏற்பட்டு இரு வர் உயிரிழந்தனர். தற்போது குழி மூடப் படாததால் மீண்டும் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உடனடியாக தோண்டப் பட்ட குழிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.  இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தரப்பில் கேட்கையில், குடிநீர் குழாயின் வால்வுகள் உள்ள பகுதியில் காங்கிரீட் தளம் அமைக்கப்பட்டு  வருகின் றது.  மேலும் ஒவ்வொரு பகுதியாக மூடப் பட்டு வருகின்றது. எனவே கருவலூர் பகு திகளில் ஒரு வாரத்தில் குழிகள் மூடப்படும் என தெரிவித்தனர்.