tamilnadu

பாதாள சாக்கடைக்காக தோண்டபபட்ட குழியை மூடக் கோரிக்கை பொதுமக்கள் சாலைமறியல்

ஈரோடு, மார்ச் 16- ஈரோட்டில் பாதாளசாக்கடை தோண்டப்பட்டு 25  நாட்கள் ஆகிய நிலையில் பணிகள் முடிக்காமல் உள்ளதை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், மோசிக்கீரனார் வீதியில் சுமார் 500க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து  வருகின்றனர். இப்பகுதியல் பாதாள சாக்கடை திட்டத்திற்காக குழிகள் தோண்டப்பட்டு பாதி யில் நிறுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு பயன்ப டுத்துவதற்காக இருந்த குழாய்கள் ஆங்காங்கே சாலையிலேயே போடப்பட்டுள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் பொதுமக்கள் பெரும் சிரமத் திற்குள்ளாகின்றனர். மேலும் இப்பகுதிக்கு செல்லும்  குடிநீர் குழாயானது உடைந்து குடிநீர் வீணாகிக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதி காரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொது மக்கள் திங்களன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகள் மூடப்பட வேண்டும். குடிநீர்  குழாயினை உடனடியாக சரிசெய்து முறையாக குடி நீர் வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங் களை எழுப்பினர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ  இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும்  மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த் தைக்கு பிறகு சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற  மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.