திருப்பூர், மார்ச் 2 - மத்திய அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத பட்ஜெட்டைக் கண் டித்து அனைத்துத் தொழிற்சங்கங்கள் சார்பில் திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. திருப்பூர் தியாகி குமரன் நினைவ கம் முன்பாக திங்களன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எல்பிஎப் நிர்வாகி சிதம்பரசாமி தலைமை வகித்தார். இதில் மத்திய அரசின் பட்ஜெட்டில் தொழிலாளர் விரோத அம்சங்களை அம்பலப்படுத்தி சிஐ டியு மாவட்டச் செயலாளர் கே.ரங்க ராஜ், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் என்.சேகர், எல்பிஎப் செயலாளர் ரங்க சாமி, ஐஎன்டியுசி செயலாளர் அ.சிவசாமி, எச்எம்எஸ் செயலாளர் முத்துசாமி, எம்எல்எப் நிர்வாகி பாண்டியராஜ் ஆகியோர் உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஎப், ஐஎன்டியுசி, எம் எல்எப், எச்எம்எஸ் ஆகிய சங்கங்க ளைச் சேர்ந்த தொழிலாளர்கள் பெருந் திரளாகக் கலந்து கொண்டனர்.