திருப்பூர், ஜூன் 13 – திருப்பூர் மாவட்டத்தில் பெருங்குற்றங் கள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவல கத்தில் கோவை சரக காவல் துணைத் தலை வர் (டிஐஜி) முத்துசாமி திங்களன்று ஆய்வு மேற்கொண்டார். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் சசாங்சாய், உட்கோட்ட துணைக் கண்கா ணிப்பாளர்கள், மாவட்ட கூடுதல் கண்கா ணிப்பாளர் ஜான்சன், சைபர் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் கிருஷ்ணசாமி ஆகி யோர் கலந்து கொண்டனர். அவிநாசியில் 21 கிலோ கஞ்சா கைப்பற் றியது, கொலை வழக்குகளில் 24 மணி நேரத் தில் குற்றவாளிகளைக் கைது செய்தது, காங்கேயத்தில் காணாமல் போன ரூ.10 லட்சம் மதிப்்புள்ள லாரிகளை கண்டுபிடித் தது, ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட முயன்ற வர்களை கைது செய்தது உள்ளிட்ட வழக்கு களில் சிறப்பாக பணிபுரிந்து துணைக் கண் காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் 9 பேர், உதவி ஆய்வாளர்கள் 12 பேர் மற்றும் காவலர்கள் 22 பேருக்கு பாராட்டுச் சான்றி தழ்களை டிஐஜி முத்துசாமி வழங்கினார். அத்துடன் காவல் துறையினர் குறைகளை யும் அவர் கேட்டறிந்தார்.