திருப்பூர், அக். 7 - ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு என்ற திட்டத்தின்படி எங்கு வேண்டு மானாலும் ரேசன் பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம் என மத்திய, மாநில அரசுகள் படாடோபமாக அறி வித்துள்ளனர்.ஆனால் இத்திட் டத்தை அமலாக்குவதில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும், இத னால் பொது மக்களுக்கு பொருட்களை விநியோகம் செய்வதில் சிரமம் ஏற்பட்டிருப்பதாக நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் கூறுகின் றனர். பொது மக்களும் ரேசன் பொருட் களைப் பெற முடியாமல் திண்டாட் டத்துடன் ஒன்றுக்கு பல முறை கடை களுக்கு நடையாய் நடந்து வருகின்ற னர். அக்டோபர் மாதம் முதல் ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு திட்டம் அமல்படுத் தப்படுவதாக தமிழக அரசு அறி வித்தது. அதன்படி ரேசன் கார்டு வைத்திருப்பவர்கள் எந்த பகுதி யில் உள்ள கடைகளுக்குச் சென்றும் தங்கள் ஸ்மார்ட் ரேசன் கார்டுகளைக் காட்டி, அதை பாயிண்ட் ஆப் சேல் கரு வியில் பதிவு செய்து பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம் என கூறப் பட்டது. எனினும் தங்கள் குடியிருப் புப் பகுதியில் ஏற்கெனவே பொருட் கள் வாங்கிய நியாய விலைக் கடை களுக்குத்தான் பெரும்பான்மையான மக்கள் பொருள் வாங்குவதற்குச் சென்றனர். ஆனால் அங்கேயே அவர் களது ஸ்மார்ட் கார்டுகள், பாயிண்ட் ஆப் சேல் கருவியில் ஸ்கேன் ஆக வில்லை என்றும், வாடிக்கையாளர்க ளின் கைரேகைகள் பதிவாகவில்லை என்றும் திரும்ப அனுப்பப்பட்டனர்.
இதனால் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தும், பொருட்களை வாங்க முடியாமல் மக்கள் வெறுங்கையுடன் திரும்பிச் சென்றனர். சிலர் கடைக் காரர்களிடம் வாக்குவாதத்திலும் ஈடுப டும் நிலை ஏற்பட்டது. இது பற்றி நியாயவிலைக் கடை விற்பனையாளர்களிடம் கேட்ட போது, அரசு புதிய திட்டத்தை அறிவித் துவிட்டது, ஆனால் எங்களிடம் பொருட்களை வாங்க வரும் மக்க ளுக்கு வழக்கமான எண்ணிக்கையில் கூட விநியோகம் செய்ய முடியாமல் நாங்கள் சிரமப்படுகிறோம். பாயிண்ட் ஆப் சேல் கருவியில் ஸ்கேன் செய்வ தற்கு நீண்ட நேரம் ஆகிறது. சிலருக்கு கைரேகை பொருந்தாமல் நிராகரித்து விடுகிறது. எனவே மக்களுக்கும், எங்க ளுக்கும்தான் தேவையில்லாத வாக்கு வாதம், சங்கடம் உருவாகிறது. இதுவரை சராசரியாக ஒரு வாரத்தில் 300 முதல் 400 கார்டுக ளுக்கு நாங்கள் பொருட்களை விநியோ கம் செய்து விடுவோம். ஆனால் இந்த அக்டோபர் மாதத்தில் தற்போது சுமார் நூறு முதல் 150 கார்டுதாரர்க ளுக்குத்தான் பொருட்களை வழங்க முடிந்தது. மற்றவர்கள் வசைபாடிக் கொண்டு திரும்பி செல்கின்றனர். சிலர் ஒன்றுக்கு பல முறை கடைக்கு நடை யாய் நடந்து கொண்டிருக்கின்றனர் என்று கடைக்காரர்கள் தெரிவித்தனர். இது பற்றி அதிகாரிகள் கவனத் துக்கு கொண்டு சென்றால், சர்வர் பிரச் சனை இருக்கிறது. எல்லா பகுதிகளை யும் ஒரே முனையத்தில் இணைக்கும் போது இது போல் பிரச்சனைகள் வருவது சகஜம்தான். அக்டோபர் 12 ஆம் தேதி வரை இந்த பிரச்சனை இருக் கும். அதுவரை சமாளித்துக் கொள் ளுங்கள் என அதிகாரிகள் அலட்சி யமாக பதில் சொல்வதாக ஊழியர்கள் கூறுகின்றனர். அதேசமயம் பொருட்களை வாங் கச் செல்லும் பொது மக்கள் புதிய திட்டம் எங்கு வேண்டுமானாலும் பொருட்களை வாங்கிக் கொள்ள லாம் எனச் சொல்கின்றனர். ஆனால் ஏற்கெனவே வாங்கிக் கொண்டிருக் கும் பொருட்களைக்கூட உருப்படி யாகப் பெற முடியவில்லையே என அதிருப்தி தெரிவித்தனர். இது போதாதென்று நியாய விலைக் கடைகளில் கார்டுகளுடன் தொலைபேசி எண்களை இணைத்தி ருக்க வேண்டும், அப்போதுதான் இத்திட்டத்தில் பலன் பெற முடியும் என் றும் கூறப்படுகிறது. ஆனால் தற்போது தொலைபேசி எண்ணை ரேசன் கார்டுடன் இணைக்கும் நடைமுறை யையும் மாநில அளவில் மையப்படுத் திவிட்டனர். உள்ளூர் அளவில் ரேசன் கார்டுகளுடன் தொலைபேசி எண்ணை இணைக்கும் பழைய நடை முறையை மாற்றிவிட்டனர். இதனா லும் பொது மக்களுக்கு சிரமம் ஏற்பட் டுள்ளது. இப்போது தொலைபேசி எண் களை இணைப்பதற்கு கடைக்கா ரர்களிடம் தெரிவித்தாலும் குடிமைப் பொருள் வட்டாட்சியர், மாவட்ட வழங்கல் அலுவலகம் என தொகுத்து அனுப்பி, அங்கிருந்து சென்னை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பு வார்களாம். அங்குதான் தொலைபேசி எண்களை இணைக்க முடியும் என கூறுகின்றனர். உள்ளூர் அளவில் எளிய முறையில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை மாநில அளவில் மையப்படுத்தி கடினமானதாக மாற்றி விட்டனர்.
இதனால் நுகர்வோருக்கு உடனடியாக தங்கள் தொலைபேசி எண்களைப் பதிவு செய்ய முடியா ததுடன், விண்ணப்பித்தாலும் எளிதில் பணி முடியும் என உத்தரவாதம் இல்லை. ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு என திட்டத்தை அறிவித்தாலும், மத்திய, மாநில அரசுகளைப் பொறுத்தவரை பொது விநியோக முறையை மேலும் கெடுபிடி மிக்கதாக மாற்றி, தற்போது பயன் பெற்று வரும் பலரை இத்திட் டத்தில் இருந்து வெளியேற்றுவதே அரசின் நோக்கமாக உள்ளது. தாரா ளமயக் கொள்கையின் ஒரு பகுதியாக பொது விநியோக முறையை கைக ழுவி வெளி மார்க்கெட் விலைக்கே மக்கள் பொருட்களை வாங்கிக் கொள் ளும் நிலைக்குத் தள்ளுகின்றனர். அதற்கேற்பத்தான் தற்போது பொது விநியோகத் திட்டத்தை எளிமைப்ப டுத்துவதாகக் கூறிக் கொண்டு, மக்க ளுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகின்ற னர் என்று சிஐடியு கூட்டுறவுப் பணியா ளர் சங்கத்தினர் குற்றஞ்சாட்டு கின்றனர். (ந.நி)