tamilnadu

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மாற்றுத்திறனாளி மாணவர்கள் பேருந்தில் அனுப்பி வைப்பு

திருப்பூர், ஜூன் 8- திருப்பூரிலிருந்து மாற்றுத்திறனாளி மாணவர் கள் தேர்வு எழுதுவதற்காக பிற மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டனர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் வருகின்ற ஜூன் 15ஆம் தேதி தொடங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காது கேளாதோர் மற் றும் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகள் பள்ளி யில் படிக்கும் மாணவர்கள் 22 பேர் திருப்பூரில் இருந்த னர். அவர்களை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு, திங்களன்று சென்னைக்கு 8 மாணவர்கள், தஞ் சைக்கு 2 பேர், தருமபுரி 4 பேர், சேலம் 4 பேர், திருவள் ளூருக்கு 4 பேர் என மொத்தம் 22 மாணவ, மாணவி கள் அவர்கள் படிக்கும் பள்ளிகளுக்கு அனுப்பி வைக் கப்பட்டனர்.  அவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வழி அனுப்பி வைக்கப்பட்டனர்.

;