tamilnadu

img

திருப்பத்தூர் கிளைச்சிறையில் 20 கைதிகளுக்கு கொரோனா...  

திருப்பத்தூர் 
தமிழகத்தில் புதிதாக உதயமாகிய திருப்பத்தூர் மாவட்டம் வேலூருக்கு அருகில் உள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள கிளைச்சிறையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த 5 பேர் உட்பட 6 பேர் புதிதாக  அடைக்கப்பட்டனர். சிறைக்கு வந்த நாள் முதல் அந்த கைதிகளுக்கு காய்ச்சல், இருமல் இருக்க கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. 

இந்நிலையில், சிறையில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் இன்று (ஆக., 21) வெளியாகிய நிலையில்,  சிறைக்காவலர் உட்பட மேலும் 21 பேருக்குக் கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் பலத்த பாதுகாப்புடன் 21 பேரும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதன் மூலம் திருப்பத்தூர் கிளைச் சிறையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.  

;