tamilnadu

img

அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளன மாநில மாநாடு இன்று துவங்குகிறது

திருநெல்வேலி:
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின்(சிஐடியு) 14-வது மாநில மாநாடு 2019 ஜூலை 21, 22, 23 தேதிகளில் நெல்லையில் நடைபெறுகிறது. இதுகுறித்து சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சம்மேளன பொது செயலாளர் கே.ஆறுமுகநயினார் நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசினார்.தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன 14-வது மாநில மாநாடு நெல்லையில் பாளையங்கோட்டை வீரமாணிக்கபுரம் அருகே உள்ள கணேசா மகாலில் நடைபெற உள்ளது. 
இம்மாநாட்டில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், அகில இந்திய பொதுச் செயலாளர் கே.கே.திவாகரன், சம்மேளன பொது செயலாளர் கே.ஆறுமுகநயினார், சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். ஜூலை 23-ம் தேதி பாளையங் ்கோட்டை வாட்டர் டேங்கில் இருந்து பேரணி புறப்பட்டு சித்த மருத்துவ கல்லூரி எதிரில் பொதுக் கூட்டம் நடைபெறும். போக்குவரத்து தொழிலாளர் மாநாட்டை வெற்றி பெற செய்ய வேண்டும் என சிஐடியு அறைகூவி அழைக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது சம்மேளன துணை தலைவர் ஏ.பி.அன்பழகன், சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.மோகன், சிஐடியு மாநில செயலாளர் ஆர்.எஸ்.செண்பகம், மாவட்ட பொருளாளர் எஸ்.பெருமாள் ஆகியோர் உடனிருந்தனர்.

;