tamilnadu

img

பட்டுக்கோட்டை தியாகிகள் நினைவிடத்தில் மலரஞ்சலி

தஞ்சாவூர் மே.05-வர்க்கப் போரில் உயிர் நீத்த தியாகிகள் ஜாம்புவானோடை சிவராமன், வாட்டாக்குடி இரணியன், ஆம்பலாபட்டு ஆறுமுகம் ஆகிய தியாகிகளின் 69-ஆவது நினைவு தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை அன்று தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். கட்சி மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.சி.பழனிவேலு, மாவட்டக்குழு உறுப்பினர் எம்.செல்வம், ஏ.கோவிந்தசாமி, எஸ்.சுப்பிரமணியன், முருக.சரவணன், எஸ்.பாலகிருஷ்ணன், ஆர்.ஜீவானந்தம், மெரினா ஆறுமுகம், ஆர்.எஸ்.வீரப்பன், நைனா முகமது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனத்தில் தோழர்கள் ஊர்வலமாகச் பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். 

;