tamilnadu

img

கோவில் விழா பிரச்சனை: மக்கள் மறியல்

புதுக்கோட்டை, மே 10-புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்கு ளம் அரங்குளலிங்க நாதர் கோவில் வைகாசி விசாகத் விழா கடந்த 9-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் விழா நிகழ்வு குறித்து கடந்த 3 ஆண்டாக இருதரப்பினரிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இதைத்தொடர்ந்து இந்தாண்டு ஒரு தரப்பினர் விழா குறித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் முறையிட்டனர். இதையடுத்து வியாழனன்று நடந்த இருதரப்பு பேச்சுவார்த்தையில் கடந்தாண்டு 2-ம் நாள் விழா நடத்தப்படாததால் இந்தாண்டும் அதையே கடைப்பிடித்து சாமி ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வம்பன் நால்ரோடு என்ற இடத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வெள்ளியன்று சாலை மறியல் செய்தனர். தகவலறிந்து வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக ஏற்பாடு செய்வதென உறுதி அளித்ததால் மறியல் கைவிடப்பட்டது.

;