tamilnadu

img

மன்னார்குடி பகுதியில் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பிரச்சாரம்

மன்னார்குடி, ஏப்.16-தஞ்சை நாடாளுமன்ற வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் திங்கட்கிழமை மன்னார்குடி நகரத்தில் பிரச்சாரம் செய்து வாக்குகளை சேகரித்தார். முன்னதாக மன்னார்குடி வந்த வேட்பாளரை கூட்டணி கட்சித் தலைவர்கள் வரவேற்றனர். மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா முன்னிலையில் தேர்தல் பணிக்குழு தலைவர் வீரா கணேசன் தலைமை வகிக்கநூற்றுக்கணக்கான இரு சக்கர வாகனங்கள்அணிவகுப்பில் பேரணியாய் புறப்பட்டு வாக்குச் சேகரிப்பு இயக்கம், மேலராஜ வீதி, வினோபாஜி தெரு உள்பட பல்வேறுபகுதிகளில் நடைபெற்றது. வழி நெடுகிலும்பெண்கள் ஆரத்தி வேட்பாளரை உற்சாகமாக வரவேற்றனர்.வாக்கு சேகரிப்பு இயக்கத்தில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மதிமுக மாவட்டச் செயலாளர் பி.பாலச்சந்திரன், விசிக தலைவர் செல்வம், வணிகர் அணிமாநில துணைச் செயலாளர் சு.ஞானசேகரன், திராவிடர் கழக மாவட்டச் செயலாளர்ஆர்.பி.சித்தார்த்தன் மற்றும் தேர்தல் பணிக்குழுவின் அனைத்துக் கட்சி பொறுப்பாளர்கள் எஸ்.ஆறுமுகம், அறிவுக்கொடி, எழிலரசன், சன் சரவணன், வி.கலைச்செல் வன், என்.மகேந்திரன், கோவி.மீனாட்சிசுந்தரம், ஆர்.கனகவேல், எஸ்.செல்வராஜ், தா.முருகையன், முத்துமாணிக்கம், காங்கிரஸ் தலைவர் எஸ்.எஸ்.செல்வராஜ், என்.மகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

;