tamilnadu

img

தோழர் வி.பி.சிந்தன் நூற்றாண்டு விழா குருதிக்கொடை

திருவாரூர், மே 9-உலகத் தொழிலாளர்களின் ஒப்பற்ற தலைவர் தோழர் வி.பி.சிந்தன் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திருவாரூர் அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிஐடியு மாவட்டக்குழுவின் சார்பில் புதன்கிழமை மாவட்ட துணைத்தலைவர் ஜி.பழனிவேல் தலைமையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமினை சிஐடியு மாவட்ட செயலாளர் டி.முருகையன் துவக்கி வைத்தார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி மற்றும் சிஐடியு மாவட்ட தலைவர் இரா.மாலதி வாழ்த்துரை வழங்கி வி.பி.சிந்தனின் தியாகத்தை போற்றிபேசினார்கள். மருத்துவர் எஸ்.ஆர்.ஜெயகார்த்திகா இரத்தம் கொடுப்பதன் முக்கியத்துவத்தை விளக்கிப் பேசினார்கள். முகாமில் 26 தோழர்கள் ரத்த தானம் செய்தனர். சிஐடியு மாவட்டநிர்வாகிகள் எம்.பி.கே.பாண்டியன், எஸ்.வைத்தியநாதன், எம்.கே.என்.அனிபா, பி.என்.லெனின், இரா.கருணாநிதி, கே.ராஜேந்திரன், கே.முனியாண்டி, கே.கஜேந்திரன், கே.வேல்ரத்தினம், மணி, பிரேமா, சசிக்குமார், சந்திரமோகன் உள்பட பலர்கலந்து கொண்டனர். முன்னதாக சிஐடியு மாவட்டக்குழு அலுவலகத்தில் தோழர் வி.பி.சிந்தன் உருவப்படத் திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

;