ஓய்வூதியருக்கான உச்சநீதிமன்ற தீர்ப்புகளை அமல்படுத்த வேண்டும். அனைத்து ஓய்வூதியர்களுக்கும் 100 சதவீதம் பஞ்சப்படியை ஈடு செய்ய வேண்டும். குடும்ப ஓய்வூதியத்தை 30 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய வங்கி ஓய்வூதிய– பணி மூப்படைந்தோர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திங்களன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்ட செயலாளர் அசோக், ஊழியர் சங்க துணை பொதுச்செயலாளர் ஜெகநாதன் ஆகியோர் பேசினர்.