tamilnadu

வாடகைக்கு வீடு எடுத்து நகை பறிப்பில் ஈடுபட்டவர் கைது

தஞ்சாவூர், ஏப்.27- தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை இந்திரா நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது தாயார் சம்பவத்தன்று குப்பைக் கொட்டுவதற்காக வீட்டுக்கு வெளியே அருகிலுள்ள பகுதிக்குச் சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த நபர், 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். இதுகுறித்து மருத்துவக் கல்லூரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.இந்நிலையில் காவல்துறையினர் வியாழக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஸ்கூட்டரில் தலைக்கவசம் அணிந்து வந்த நபரை நிறுத்தி விசாரித்தனர். இதில், திருச்சி ஸ்ரீரங்கம் ராகவேந்திரபுரத்தைச் சேர்ந்த ஏ.பிராங்க்ளின் குமார்(31). இவர், சீனிவாசனின் தாய் உள்பட மருத்துவக் கல்லூரி, தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இரு மாதங்களில் மொத்தம் 5 பெண்களிடம் நகைகள் பறித்து சென்றதும், இதற்காக தஞ்சாவூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து பிராங்க்ளின் குமாரை காவல்துறையினர் கைது செய்து 20 பவுன் நகைகளை மீட்டனர். 

;