அதிமுக துரோகம்: விசிக கண்டனம்
சென்னை, ஜூன் 22- ஆர்எஸ்எஸ் அமைப் பின் சதிச்செயலைக் கூட புரிந்து கொள்ளா மல் அதிமுக தொண்டர்க ளுக்கும் தமிழ்நாட்டுக்கும் இரண்டகம் செய்யும் அதிமுகவை தமிழ்நாடும் மக்களும் மன்னிக்க மாட்டார்கள்" என விசிக துணை பொதுச்செயலாளர் வன்னிஅரசு தெரி வித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு: சூரனை வதம் செய்த முருகா திராவிடத்தை அழிக்க வேலெடுத்து வா என மதுரை மாவட்டம் முழுக்க இந்து முன்னணி யினர் சுவரொட்டி ஒட்டி யுள்ளனர். இந்த மாநாட்டில் தான் திராவிட இயக்கமாய் உருவான அதிமுக பங்கேற்றுள்ளது. ஆரியத்தின் ஆபத்து குறித்தும் அதை அழித்தொழிக்க வேண்டிய தேவை குறித்தும் அறிஞர் அண்ணா அவர்கள் எச்சரி த்துள்ளார். அந்த அண்ணா வின் பெயரிலான இயக்கம் இப்படி ஆரியத்திடம் மண்டியிடுவது அறிஞர் அண்ணாவுக்கு மட்டும் செய்யக்கூடிய துரோக மல்ல; தமிழ்நாட்டுக்கே செய்யக்கூடிய துரோக மாகும். முருகனை வழிபடுவது என்பது வேறு; ஆனால் முருகன் பெயரை பயன்படுத்தி தமிழ்நாட்டை பலியிடுவதை எப்படி ஆதரிக்க முடியும்? ஆர்எஸ்எஸ் அமைப்பின் சதிச்செயலை கூட புரிந்து கொள்ளாமல், அதிமுக தொண்டர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் இரண்டகம் செய்யும் அதிமுகவை தமிழ்நாடும் மக்களும் மன்னிக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்களிடம் வழிப் பறியில் ஈடுபட்ட 7 பேர் கைது
கடலூர், ஜூன் 22- பண்ருட்டி அருகே பொதுமக்களிடம் வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட 7 பேர் கைது, மேலும் ஒருவரை தேடிவருகின்றனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள முத்தாண்டி குப்பம் பகுதியில் சாலையில் செல்லும் பொது மக்களை தாக்கி நகை மற்றும் பணத்தை வழிப்பறி செய்தும், டாஸ்மாக் கடைகளில் பணத்தை கொள்ளையடிப்பதும் போன்ற குற்ற செயல்களில் 8 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டு வந்தது. இந்த நிலையில் மேல் காங்கேயன் குப்பம் முந்திரிதோப்பு பகுதியில் 8 பேர் கொண்ட கும்பல் பதுங்கி இருந்து கொள்ளையடிக்க சதி திட்டம் தீட்டி வரு வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், ஆய்வாளர் நந்தகுமார் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணிகள் ஈடுபட்டனர். அப்போது முந்திரி தோப்பில் பதுங்கி இருந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்து மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சாலையில் தனியாக செல்லும் பெண்களிடம் வழிபறிக் கொள்ளையில் ஈடுபடுவதும், இரவு நேரங்களில் டாஸ்மாக் கடைகளில் கொள்ளையடிப்பது போன்ற சதி திட்டங்களை தீட்டி வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக ராம்கி (33), ராஜதுரை (27), ரஜினிகாந்த் (43), சுகுமாரன் (20), அரவிந்த் (20), கலை மணி (32), தணிகைச் செல்வம் (19) ஆகிய 7 நபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய அனந்தராமன் என்பவரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து வீச்சரு வாள், இரும்பு பைப், உருட்டு கட்டைகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 7 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.