tamilnadu

img

காஞ்சியில் டென்னிஸ் மைதானம் அமைச்சர்கள் திறந்து வைத்தனர்

காஞ்சியில் டென்னிஸ் மைதானம்   அமைச்சர்கள் திறந்து வைத்தனர்

காஞ்சிபுரம், ஜூன் 22- காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கில் ரூ.29 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள டென்னிஸ் மைதானத்தை அமைச்சர்கள் ஆர்.காந்தி அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் திறந்து வைத்தனர். காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.29 லட்சம் மதிப்பீட்டில்  இந்த டென்னிஸ் மைதானம் கட்டப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன்,  காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ்,  காஞ்சிபுரம் மாவட்ட அமெச்சூர் டென்னிஸ் சங்க பொருளாளர் எம்.பருக், மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.