தீக்கதிர் திருச்சி பதிப்பு பத்தாண்டுகளை நிறைவு செய்து இன்று 11வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கோவை தொழிலாளி வர்க்கத்தின் நிதியுதவியுடன் சென்னையில் துவங்கப் பட்ட தீக்கதிர் ஏடு பின்னர்மதுரையிலிருந்து செயல்படத் துவங்கியது.
சென்னை பதிப்பு, கோவை பதிப்புகளை தொடர்ந்து காவிரி கரை யோரம் திருச்சியிலிருந்து கடந்த 10 ஆண்டுகளாக நான்காவது பதிப்பாகசெயல்பட்டு வருகிறது. கொரோனா எனும் கொள்ளை நோய் காலத்தில்ஊடகங்கள் அனைத்தும் குறிப்பாக அச்சு ஊடகங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றன. எனினும் இடர்பாடுகளை எதிர்கொண்டு தேச நலன், மக்கள்நலன் ஒன்றையே கருத்தில்கொண்டு தீக்கதிர் தொடர்ந்துவெளி வருகிறது. ஊடக உலகில் உண்மையின் பேரொளியாக சுடரும்தீக்கதிரின் பயணத்திற்கு துணை நிற்கும் ஊழியர்கள்செய்தியாளர்கள், வாசகர்கள், முகவர்கள், விளம்பரதாரர்கள் அனைவருக்கும் இந்நாளில் நன்றி செலுத்துகிறோம். தங்களதுதுணையுடன். தொய்வின்றிலட்சியப் பயணத்தை தொடர உறுதியேற்கிறோம்.
ஆசிரியர்