tamilnadu

img

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழப்பு

பள்ளி விடுதியில் தங்கியிருந்த மாணவி, பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான லேடி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் உள்ள விடுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கிப் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு வர்ஷா என்ற மாணவி விடுதியில் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பாம்பு கடித்ததில் வாயில் நுரை தள்ளி இறந்துள்ளார். இச்சம்பவம் சக மாணவிகளிடையே பெரும் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
 

;