திண்டுக்கல் அருகே மது பாட்டிலுக்குள் குட்டி தவளை இருந்த சம்பவம் அப்பகுதியில் மதுப்பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன் பட்டி அருகே உள்ள நெல்லூர் கிராமத்தை சேர்ந்த பாண்டி என்பவர் சித்தரேவு அரசு மதுபான கடையில் மது வாங்கி உள்ளார். அந்த மது பாட்டிலை திறக்க குலுக்கிய போது அதில் ஏதோ மிதப்பதை பார்த்துள்ளார். அப்போது பாட்டிலில் உயிரிழந்த நிலையில் குட்டி தவளை இருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதுகுறித்து டாஸ்மார்க் கடையின் விற்பனையாளரிடம் முறையிட்டுள்ளார். ஆனால் விற்பனையாளர் அதுகுறித்து கண்டுகொள்ளாமல் வேறு பாட்டில் தருவதாக கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.