tamilnadu

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 3 ஆண்டு சிறை

தருமபுரி, நவ. 6- பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த சிறுமிக்கு பாலி யல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு மாவட்ட மக ளிர் விரைவு நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண் டன் (25). இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு பென்னா கரம் பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரின் பேரில் பென்னாகரம் மக ளிர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட னர். பின்னர் போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.  இந்த வழக்கு தருமபுரி மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றனத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணையின் முடிவில் மணிகண்டன் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்து மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்ற  நீதிபதி (கூடுதல் பொறுப்பு) ஜீவானந்தம் தீர்ப்பளித்தார்.