tamilnadu

img

ஒப்பந்த ஊழியர்களுக்கு நிலுவை ஊதியத்தை வழங்கிடுக பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, ஜூன் 12- பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழி யர்களுக்கு நிலுவை ஊதியத்தை வழங்க வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் சார்பில் தருமபுரியில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. தருமபுரி மாவட்டத்தில் பிஎஸ் எனஎல் ஒப்பந்த ஊழியர்களக 300க்கும் மேற்பட்ட பணிபுரி கின்றனர். இவர்களுக்கு ஏப்ரல், மே மாத ஊதியத்தை வழங்க வில்லை. இதனால் ஒப்பந்த ஊழி யர்கள் மிகவும் சிரமப்பட்டு வரு கின்றனர். எனவே ஒப்பந்த ஊழியர்களுக்கு உடனே ஊதி யம் வழங்க வேண்டும் என வலி யுறுத்தி புதனன்று தருமபுரி டவுன் தொலைபேசி நிலையம் முன்பு பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் டி. பாஸ்கரன் மாவட்ட செயலாளர் எம்.பருதிவேல் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில உதவி செயலாளர் எம்.பாபு, மாவட்ட செயலாளர் பி.கிருஷ்ணன், மாவட்ட பொரு ளாளர் என்.ரமேஷ், ஒப்பந்த ஊழியர்சங்க மாநில அமைப்பு செயலாளர் பி.ஸ்ரீதரன், மாவட்ட செயலாளர் எம்.செளந்தரராஜன், ஓய்வுபெற்ற ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.அழ கிரிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;