பாஜக அரசு தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி வருவதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பென்னாகரம் புதிய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் பென்னாகரம் பகுதி பொது செயலாளர் வி.ரவி தலைமை வகித்தார் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.மாதன் ஏரியூர் ஒன்றிய செயலாளர் என்.பி.முருகன் பென்னாகரம் நகர செயலாளர் எழிலரசு மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆ.ஜீவானந்தம் எம்.சிவா முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எம்.பி.இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். முன்னதாக பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறிக்கும் வகையில் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், விறகு அடுப்பு பற்ற வைத்தும், இரு சக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்தும் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.