tamilnadu

img

5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, வளிமண்டல மேலடுக்கில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான அளவு வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடனும், நகரின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

;