கும்பகோணம், மே 19- தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் ஒன்றியம் திருபுவனம் காங்கேயம் பேட்டை ரயிலடி தெருவைச் சேர்ந்த எஸ்.பக்தவச்சலம் (75) திங்கள் இரவு இயற்கை எய்தினார். இவர் லெனின் தந்தையும், மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முது பெரும் தோழரும், விவசாயத் தொ ழிலாளர் சங்கத்தின் முன்னாள் பொறுப்பாளமாவார். அவரது மறைவுச் செய்தி யறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவிடை மருதூர் வடக்கு ஒன்றி யச் செயலாளர் சா.ஜீவ பாரதி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே. பக்கிரிசாமி, நாகேந்தி ரன், கேசவன் உள்ளிட்டோர் தோழர் பக்தவச்சலம் உடலுக்கு மலரஞ்சலி செலுத்தி வீரவணக்கம் செய்தனர். அவரது இறுதி நிகழ்ச்சி செவ்வாயன்று நடைபெற்றது. மறைந்த தோழருக்கு மனைவியும் 3 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.