தஞ்சாவூர், ஜூன் 6- கொரோனா ஊரடங்கு, உலகம் முழுவதும் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசமின்றி அனை வரின் வாழ்க்கையையும் புரட்டிப் போட்டுள்ளது. இதில் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் வழக்கு ரைஞரை கூடை பின்னும் தொழிலா ளியாக மாற்றியுள்ளது கொரோனா. பேராவூரணியை சேர்ந்தவர் வழக்குரைஞர் உத்தமகுமரன். மிக பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த இவர் பல்வேறு சிரமங்களுக்கிடை யில் படித்து வழக்குரைஞர் பணி யாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் உதவி செய்வதற்கு யாருமில்லாத தால் கூடை பின்னும் தொழிலை செய்து வருகிறார். இது குறித்து, உத்தமகுமரன் கூறியது, கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பி னருக்கு அந்தந்த பகுதியில் உள்ள பொதுநல அமைப்புகள் நிவாரண உதவிகளை செய்துள்ளனர். எங்க ளது பகுதி மக்களுக்கு உதவிக்கு கூட யாரை அணுகுவது என்ற விழிப்புணர்வு இல்லாததால் எவ்வித நிவாரணமும் வழங்கப் படவில்லை. குடும்ப செலவை சமாளிக்க முடியாமல் ஆற்றுப் பகுதிக்கு சென்று ஈச்சங்கோரைக ளை வெட்டி கூடை பின்னுகிறேன். கூடைகளை விற்பனை செய்யவும் வழியில்லை, அவசியப்பட்டு யாரா வது வந்து வாங்கினால் தான் உண்டு. ஊரடங்கால் பாதிக்கப் பட்டுள்ள எங்கள் பகுதி மக்களுக்கு அரசு நிவாரணம் வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.