பயிர்க் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
தஞ்சாவூர் டிச.10 பேராவூரணி வட்டாரத்தை பொறுத்தமட்டில் சம்பா சாகுபடி இலக்கு 12,750 ஏக்கர் (5,100 எக்டேர்) ஆகும். நடப்பு தேதி வரை இலக்கினை தாண்டி 14,125 ஏக்கர் (5,650 எக்டேர்) வரை நட வுப் பணிகள் முழுவதும் முடிக்கப் பட்டுள்ளன. நெல் சாகுபடிக்கு நடப்பாண்டு உகந்த சூழ்நிலையாக அமைந்த போதிலும் தற்சமயம் கனமழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை இடர்பாடுகள் மற்றும் பூச்சி, நோய் தாக்குதலால் மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் உடனடியாக விவசாயிகள் அருகில் உள்ள இ-பொது சேவை மையத்திலோ அல்லது தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களிலோ பயிர் காப்பீடு செய்ய வேண்டும். பிரீமியத் தொகையான ஏக்கருக்கு ரூ.465 டிச.15 வரை காத்திருக்காமல் உட னடியாக பயிர் காப்பீடு செய்வதற்கு அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் உறுதிமொழி படிவம், ஆதார் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவ ணங்களை எடுத்துச் செல்ல வேண்டும் என பேராவூரணி வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.மாலதி தெரிவித்துள் ளார்.
தஞ்சாவூரில் உள்ளாட்சித் தேர்தல் மனுத் தாக்கல்
தஞ்சாவூர் டிச.10- தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளா ட்சித் தேர்தல் இரு கட்டங்களாக நடை பெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டி யிட முதல் நாளான திங்கள்கிழமை பலர் விண்ணப்பங்களை மட்டும் வாங்கிச் சென்றனர். தஞ்சாவூர் ஊராட்சியில் 3 வார்டு உறுப்பினர் பதவிக்கும், இரண்டு ஊராட்சி தலைவர் பதவிக்கும், திருவை யாறில் 8 வார்டு உறுப்பினர் பதவிக்கும், ஒரு ஊராட்சி மன்ற தலைவர் பத விக்கும், பூதலூர் ஊராட்சியில் 6 வார்டு உறுப்பினர் பதவிக்கும், திருவோ ணத்தில் 3 வார்டு உறுப்பினர் பதவிக்கும், கும்பகோணத்தில் 12 வார்டு உறுப்பினர் பதவிக்கும், திருப்பனந்தாளில் 6 வார்டு உறுப்பினர் பதவிக்கும், பாப நாசத்தில் 26 வார்டு உறுப்பினர் பதவிக்கும், அம்மாபேட்டையில் 2 வார்டு உறுப்பினர் பதவிக்கும், 4 ஊராட்சி தலைவர் பதவிக்கும், மதுக்கூரில் 3 வார்டு உறுப்பினர் பதவிக்கும், 2 ஊராட்சி தலைவர் பதவிக்கும், பேராவூர ணியில் 7 வார்டு உறுப்பினர் பதவிக்கும் என மாவட்டத்தில் 76 ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கும், 9 ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். மாவட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பி னர் மற்றும் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு யாரும் வேட்புமனுக்களை வழங்கவில்லை. அதே போல், ஒரத்தநாடு, திருவிடை மருதூர், பட்டுக்கோட்டை, சேதுபாவா சத்திரம் ஒன்றியத்தில் திங்கள்கிழமை ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்ய வில்லை.