tamilnadu

நூறு நாள் திட்ட பணியாளர்களுக்கு தேர்தல் நாளன்று விடுப்புடன் சம்பளம் விதொச வரவேற்பு

தஞ்சாவூர், ஏப்.23- நூறு நாள் வேலைத் திட்ட பணியாளர்களுக்கு, தேர்தல் நாளன்று விடுப்புடன் கூடிய சம்பளம் வழங்குவதாக ஊரக வளர்ச்சி துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை இயக்குனர் அறிவிப்புக்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இச்சங்கத்தின் மாநிலச் செயலாளர் கே.பக்கிரிசாமி கூறியதாவது: “நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் தினத்தன்று பல இடங்களில் 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளர்களுக்குவேலை வழங்கி அவர்கள் வாக்குரிமையை பறித்த அவலம் நடந்துள்ளது. அதே நேரத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை மற்றும்பஞ்சாயத்து ராஜ் துறை இயக்குனர் கே.பாஸ்கர், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.அதில், ‘கடந்த 18-ஆம் தேதி 100 நாள்வேலை திட்ட பணியாளர்களுக்கு விடுப்புடன் கூடிய சம்பளம் வழங்க வேண்டும்’ என அறிவித்துள்ளார். இதனை அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் வரவேற்கிறது. அதே நேரத்தில் பல இடங்களில் பணியாளர்களுக்கு விடுப்பு வழங்கப்படாத அவலமும் நடந்துள்ளது என சுட்டிக்காட்ட விரும்புகிறது. மேலும், 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களின் சம்பளம் ரூ.224 லிருந்து 229 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதை வரவேற்கும் நேரத்தில் தற்போதுள்ள விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அரசு அறிவித்துள்ளசம்பள உயர்வு என்பது போதாது. எனவே கூலியை ரூ.500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். இதுவே அரசு மக்களுக்கு செய்யும் உதவியாக அமையும். ஐந்து ரூபாய் சம்பள உயர்வு என்பது ஏற்றுக் கொள்ள இயலாது. எனவே கூலியை உயர்த்தி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை மற்றும்பஞ்சாயத்து ராஜ் துறை இயக்குனர் அறிவிப்பை அமல்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் கே.பக்கிரிசாமி தெரிவித்துள்ளார்.

;