tamilnadu

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மறுக்கும் தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றுக தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

தஞ்சாவூர், ஜன.21- டெல்டா மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்கக் கூடாது என தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார் தெரிவித்துள்ளதாவது, “கடந்த ஆண்டு கஜா புயல் பாதிப்பு, அதற்கு முந்தைய ஆண்டு வறட்சி என்கிற நிலையில், இவ்வாண்டு டெல்டாவில் நெல் சாகுபடி உரிய காலத்தில் நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு நல்ல மகசூல் கிடைத்து, விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்படும் என விவசாயிகள் நம்பிக்கையோடு காத்தி ருந்த நிலையில், ஆனைக் கொம்பன் நோய் தாக்குதல், புகையான் நோய் தாக்குதல் மற்றும் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் சமீபத்தில் பெய்த திடீர் மழையால், நெல் மணிகள் வயலில் புதைந்து, பெரும் மகசூல் இழப்பு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.  எனவே பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டு உரிய நிவாரணம் கிடைத்தி டவும், விவசாயிகள் பாதிக் காத வண்ணம் பயிர் காப்பீடு தொகை கிடைக்கவும், தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகும் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய் திடவும் உரிய தலையீடுக ளை டெல்டா மாவட்ட அமைச் சர்கள் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கி றோம்.  ஹைட்ரோ கார்பன் திட்டம் ஆய்வு கிணறுக ளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவை இல்லை என்றும், பொதுமக்கள் கருப்பு கருத்து கேட்பு அவசியம் இல்லை என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது என்பது, ஏற்கனவே மாநில அரசு எடுத்த நிலைப்பாட்டிற்கு எதிராக, மத்திய அரசின் தற் போதைய அறிவிப்பு உள்ளது. எனவே சுற்றுச் சூழல் அனுமதி, பொது மக்கள் கருத்து கேட்பு அவசி யம் என்றும், காவிரி டெல் டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறி வித்து ஹைட்ரோ கார்பன் போன்ற பேரழிவு திட்டங்க ளை தமிழகத்தில் அனு மதிக்க மாட்டோம் என்று சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறை வேற்ற ஆவன செய்திடுமாறு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்” இவ்வாறு தெரிவித்துள்ளார். 

;