தஞ்சாவூர் ஆக.13- தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 3 ஆவது மாநில மாநாடு தஞ்சாவூரில் தோழர் அசோக் நினை வரங்கில் (ஜெயராம் மஹால்) வரும்15, 16,17 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. முதல் நாளான ஆக.15 வியாழக்கிழமை வெண்மணியிலி ருந்து, வெண்மணி தியாகிகள் சுடர், நெல்லையில் இருந்து தோழர் அசோக் நினைவு சமூக நீதிச் சுடர், தஞ்சை மாவட்டம் இராயமுண்டான்பட்டியில் இருந்து தியாகி என்.வெங்கடாசலம் நினைவுச்சுடர், ஓசூரில் இருந்து நந்திஸ், சுவாதி நினைவு ஆணவப்படுகொலை ஒழிப்புச் சுடர், அரியலூரில் இருந்து அனிதா, நந்தினி நினைவு கல்வி உரிமைச் சுடர் ஆகியவை மாநாட்டிற்கு வந்துசேருகிறது. இந்தச் சுடர்களை பெறும் நிகழ்விற்கு இந்திய மாணவர் சங்க மாநிலச் செயலாளர் வி.மாரியப்பன் தலைமை வகிக்கிறார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.பாலா சாதிய எதிர்ப்பு உறுதி மொழி முன்மொழிகிறார்.
நீதியரசர் கே.சந்துரு, தொல்.திருமாவளவன் எம்.பி
தொடர்ந்து மாலை 4 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் நீதியரசர் கே.சந்துரு, சிபிஎம் மாநிலச் செயலா ளர் கே.பாலகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி மற்றும் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
சுபாஷினி அலி
தொடர்ந்து மறுநாள் ஆக.16 வெள்ளிக்கிழமை முன்னாள் எம்பி சுபாஷினி அலி, தமிழ்நாடு ஒடுக்கப்பட் டோர் வாழ்வுரிமை இயக்கம் மாநில பொதுச் செயலாளர் மு.வீரபாண்டியன், ஆதித்தமிழர் பேரவை இரா.அதிய மான், முன்னாள் எம்எல்ஏ சு.கா.முருக வேல் ராஜன் மற்றும் தலைவர்கள் கலந்து கொண்டு பேசுகின்றனர். ஆக 17 சனிக்கிழமை ஆதவன் தீட்சண்யா, கொளத்தூர் மணி, கோவை கு.ராமகிருஷ்ணன், சி.நிக்கோலஸ், பெ.சண்முகம் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்திப் பேச உள்ளனர். புதிய மாநி லக்குழு மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். கேரள முன்னாள் சபாநாயகர் ஆர்.ராதாகிருஷ்ணன் நிறைவுரையாற்றுகிறார்.
சீத்தாராம் யெச்சூரி
தொடர்ந்து பல்லாயிரக்க ணக்கானோர் பங்கேற்கும் சாதி ஒழிப்பு பேரணியும், மாலை 5 மணிக்கு திலகர் திடலில் பொதுக்கூட்டம் நடைபெறு கிறது. மாநிலத் தலைவர் பி.சம்பத், பொ துச்செயலாளர் கே.சாமுவேல் ராஜ், சிபிஎம் அகில இந்திய பொதுச்செயலா ளர் சீத்தாராம் யெச்சூரி ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர். இதையொட்டி முன்னணியின் மாவட்டச் செயலாளர் சின்னை பாண்டியன், மாவட்டத் தலைவர் கே.அபிமன்னன், வரவேற்பு குழு பொருளாளர் ஆர்.புண்ணியமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் மாநாட்டு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாட்டையொட்டி ஆங்காங்கே விளம்பர தட்டிகள், சுவர் விளம்ப ரங்கள், தோரணங்கள், சுவரொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. தஞ்சை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. மாநாட்டிற்கு வருவோர் தஞ்சாவூர் புதிய, பழைய பேருந்து நிலையத்திலிருந்து நகரப் பேருந்தில் வருவோர் ரயிலடியில் இறங்கி ஜெயரா ம் மஹால் வருமாறு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச்செயலாளர் சின்னை பாண்டியன் கேட்டுக் கொண்டுள்ளார்.