tamilnadu

img

கடலில் மூழ்கிய 3 இராமேஸ்வரம் மீனவர்கள்: சேதுபாவாசத்திரம் அருகே ஒருவர் உடல் கண்டெடுப்பு

தஞ்சாவூர்:
கடலில் மூழ்கிய மூன்று இராமேஸ்வரம் மீனவர்களில் ஒருவர் உடல் சேதுபாவாசத்திரம் அருகே கண்டெடுக்கப் பட்டது.கடந்த 13 ஆம் தேதி இராமேஸ்வரத்தை சேர்ந்த ஜேசு(60), ரெஜின் பாஸ்கர் (44), மலர்வண்ணன்(48), ஆஸ்டின்சுசீந்தர்(19) ஆகியோர் விசைப்படகுமூலம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது படகில் பழுது ஏற்பட்டு கடலில் மூழ்கியுள்ளது. இதில் ஜேசு மட்டும் உயிர் தப்பினார்.மற்ற மூன்று பேரும் கடலில் மூழ்கினர். கடலில் மூழ்கிய மீனவர்களை தொடர்ந்து படகுகள் மூலம்இராமேஸ்வரம் மீனவர்கள் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள், கடலோர காவல்துறையினர் கடலில் தேடி வந்தனர்.

இந்நிலையில் வெள் ளிக்கிழமை மதியம் தஞ்சைமாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகிலுள்ள கொள்ளுக்காட்டில் இருந்து 20 கடல் மைல் தொலைவில் ரெஜின் பாஸ்கர் உடல் கடலில்மிதந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை மீட்டுகொள்ளுக்காடு மீன்பிடி துறைமுகம்கொண்டு வந்து சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து சேதுபாவாசத்திரம் கடலோர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

;