tamilnadu

img

பிளஸ் 1 பொதுத்தேர்வு சேலம் மாவட்டம் 95.39 சதவிகிதம் தேர்ச்சி

சேலம், மே 8- தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 3 ஆம் தேதி தொடங்கி 22 ஆம் தேதி வரை பிளஸ்-1 பொது தேர்வு நடைபெற்றது. இத்தேர்விற்கான முடிவுகள் புதனன்று வெளியிடப்பட்டன. இதில் சேலம் மாவட்டத்தில் தேர்வெழுதிய மாணவ, மாணவிகளில் 95.39 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று ள்ளனர். கடந்தாண்டு 90.92 சதவிகிதத்தினர் தேர்ச்சி பெற்ற நிலையில் தற்போது தேர்ச்சி விகிதம் 4.47 சதவிதம் அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக, சேலம் மாவட்டத்தில் 36,770 பேர் தேர்வெழுதிய நிலையில் 35,074 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

;