tamilnadu

img

காலமானார்

சேலம், அக்.4- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றுபட்ட கோவை மாவட்டக்குழு உறுப்பினரும், சிஐடியு கைத்தறி சங்கத்தை உருவாக்கிய தலைவர்களுள் ஒருவரான  மறைந்த தோழர் சி.எஸ்.பொன்னுசாமியின் மனைவியும், சிபிஐ(எம்) சேலம் மாவட்டக்குழு உறுப்பினர் பொன்.ரமணியின் தாயாருமான சி.இராமாத்தாள் சேலத்தில் உள்ள இல்லத்தில் வியாழனன்று காலமானார். இவரின் மறைவை அறிந்து அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட்  கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பி.செல்வசிங், மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி மற்றும் மாவட்ட செயற்குழு, மாவட்ட குழு உறுப்பினர்கள், சிஐடியு தலை வர்கள் அஞ்சலி செலுத்தினர்.