tamilnadu

கூட்டு பாலியல் பலாத்காரம் : கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி

சேலம்:
சேலம் அருகே கூட்டு பாலியல் பலாத்காரத்திற்குள் ளான கல்லூரி மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர்நாமக்கல் அருகே ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் தினமும் கல்லூரி பேருந்திலேயே கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். அப்போது ஒரு இளைஞருடன் அந்த மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைஅறிந்த ஆத்தூர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் 5 பேர் மாணவி, அம்மாணவி தனது ஆண் நண்பருடன் இருந்ததைரகசியமாக புகைப்படம் பிடித்து மிரட்டி வந்துள்ளனர். இதன்பின் அந்த மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம்செய்ததுடன், அதனையும் வீடியோவாக பதிவு செய்து தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர். இதனால் பெரும் மனஉளைச்சலுக்குள்ளான அம்மாணவி சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்க முயன்றுள்ளார். ஆனால், இப்புகாரை காவல்துறையினர் பெற மறுத்து திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த அம்மாணவி வியாழனன்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதன்பின்னரே இச்சம்பவம் வெளியே தெரியவந்த நிலையில் காவல்துறையினர் உயர் அதிகாரிகள் தீவிரவிசாரணையை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் கல்லூரி பேருந்தின் ஓட்டுநர் உள்பட 5 பேர் கொண்ட கும்பல்இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.  மேலும், இக்கும்பல் இதேபோல 15-க்கும் மேற்பட்டோரை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்ததுடன், பல இளம்பெண்களை பாலியல் வல்லுறவு செய்ததும் தெரியவந்துள்ளது, இதனால் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி, அக்கும்பலைச் சேர்ந்தோரை தேடி வருகின்றனர்.

;