tamilnadu

மலேசியாவில் உலக தமிழ் கவிதை மாநாடு

சென்னை,ஏப். 22-இரண்டாவது உலக தமிழ்க் கவிதை மாநாடு மலேசியாவின் ஈப்போ நகரத்தில் நடைபெறவுள்ளது.இந்தியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கனடா, இலங்கை போன்ற நாடுகளிலும் மலேசியாவிலும் தமிழ் மொழி பயன்பாட்டு மொழியாகத் திகழ்கிறது. இந்நிலையில் உலகத் தமிழறிஞர்கள், தமிழ்ப் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், தமிழ் ஆய்வாளர்கள், வளரும் மாணவச் செல்வங்கள் என அனைவரையும் ஒன்றிணைத்து தமிழ்க் கவிதை சிந்தனைகளை உலக அரங்கில் வெளிப்படுத்துவது இக்கவிதை மாநாட்டின் நோக்கமாகும் என்றுமாநாட்டு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.தமிழ்க் கவிதைகளை மேம்படுத்த வேண்டும் என்ற உயரிய சிந்தனையோடு நமதுநாட்டிலுள்ள பத்திற்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களின் ஒப்புதலோடு நவம்பர் மாதம் 9, 10 ஆகிய இரண்டு நாட்கள் உலகதமிழ்க் கவிதை மாநாடு நடத்த ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றத்தின் சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது மாநாடு தொடர்பான மேலும் விவரங்களைஅறிய தொடர்பு கொள்ள முனைவர்; க.சங்கர்,ஒருங்கிணைப்பாளர் (அயலக தமிழறிஞர்கள்), இரண்டாம் உலக தமிழ்க்கவிதை மாநாடு, மலேசியா. தலைவர், அருள் தமிழ்க்கல்வி அறக்கட்டளை, கைபேசி: 9444300228 

;