தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்தில் உள்ள தனியார் முதியோர் காப்பகத்தில் உணவு ஒவ்வாமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்தில் உள்ள அன்னை முதியோர் இல்லத்தில் உணவை சாப்பிட்ட அனைவருக்கும் உணவு ஒவ்வாமை ஏற்பட்டு தெங்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது சிகிச்சை பலனின்றி, செங்கோட்டை சங்கர் கணேஷ் (48), அம்பிகா (40), சொக்கம்பட்டி முருகம்மாள் (45), மதுரை தனலட்சுமி (70) ஆகியோர் உயிரிழந்தனர்.
இதை தொடர்ந்து அன்னை முதியோர் இல்லத்திற்கு சீல் வைக்கப்பட்டு, இல்லத்தை நடத்தி வரும் ராஜேந்திரன் கைது செய்யப்பட்டார். ஆபத்தான நிலையில் இருந்த 12 பேர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், கடந்த 17-ஆம் தேதி முப்புடாதி (50) என்பவர் உயிரிழந்தார். இன்று, செல்வராஜ் (70) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.