tamilnadu

img

வி.பி.சிந்தன் நினைவு ரத்ததானம்

சென்னை,மே 25-வி.பி.சிந்தன் நினைவு தினத்தை முன்னிட்டு தீபன் ரத்ததான குழு சார்பில் சனிக்கிழமை (மே 25) அன்று மீஞ்சூரில் தனியார் மண்டபத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது.மீஞ்சூர் பகுதியில் உள்ள தீபன் ரத்ததான குழுவினர் இரண்டாம் ஆண்டு வி.பி.சிந்தன் நினைவு தினத்தை முன்னிட்டு ரத்ததானம் செய் தனர். நிகழ்ச்சிக்கு சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் எஸ். நரேஷ்குமார் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் அமைச்சர் க.சுந்தரம், வடசென்னை அனல் மின் நிலைய பகுதி 1-ன் தலைமைப் பொறியாளர் எம்.தட்சிணாமூர்த்தி, சிபிசிஎல் முதன்மை பொது மேலாளர் பி.பன்னீர்செல் வம், திருவள்ளூர் மாவட்ட அரசு ரத்த வங்கி தலைமை மருத்துவர் விஷ்ணு பிரியா, சிஐடியு மாவட்டத் தலைவர் கே.விஜயன், மாவட்ட துணைத் தலைவர் ஜி.விநாயக மூர்த்தி, விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.துளசி நாராயணன், சிஐடியு நிர்வாகிகள் சிவப்பிரகாசம், சூரியநாராயணன், சரவணன், குகன், பரந்தாமன், சாக்ரடீஸ் ஆகியோர் பேசினர். சதீஷ் நன்றி கூறினார்.திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனை, பொன்னேரி அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர்கள் ரத்த சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்த முகாமில் 50க்கும் மேற்பட்டோர்  ரத்த தானம் செய்தனர்.

;