நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தேர்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்களுக்கு மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி பதவி பிரமானம் செய்து வைத்து வருகிறார்.
சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்று வருகின்றனர்.
இதில் 102 பெண் உறுப்பினர்களும் , 98 ஆண் உறுப்பினர்களும் உள்ளனர்.
இன்று பதவியேற்ற உறுப்பினர்கள் சேர்ந்து வாக்களித்து 4ம் தேதி மேயர் மற்றும் துணை மேயரை தேர்ந்தெடுக்க உள்ளனர்.
சென்னை மாநகராட்சி மாமன்றத்தில்
திமுக 153
அதிமுக 15
காங்கிரஸ் 13
சுயேச்சை 5
சிபிஎம் 4
விசிக 4
மதிமுக 2
சிபிஐ 1
பாஜக 1
அமமுக 1
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 - ஆகிய உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்