உடுமலை, பிப். 15- மக்காச்சோளத்திற்கு ஆதார விலையாக ரூ.3 ஆயிரம் நிர்ண யிக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தின் குடிமங்கலம் ஒன்றிய பேரவை வி.வல்லக்குண்டா புரத்தில் ஆர்.லட்சுமணசாமி தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் மாவட்ட செயலாளர் ஆர்.குமார் சிறப்புரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஒன்றிய செயலாளர் என்.சசிகலா வாழ்த்திப் பேசினார். இம்மாநாட்டில் நல்லாறு- ஆனைமலையாறு அணைத்திட் டத்தை தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும். மக்காச் சோளத்திற்கு ஆதார விலையாக ரூ.3 ஆயிரம் நிர்ணயிக்க வேண் டும். தென்னையைத் தாக்கும் வெள்ளை ஈ, ஈரியோபைட் மற் றும் மர எலிகளைக் கட்டுப்படுத்த தமிழக அரசும், வேளாண்மைத் துறையும் அவசர கால நடவ டிக்கை எடுக்க வேண்டும். விவசா யிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் 4 சதவிகித வட்டியுடன் கடன் வழங்க வேண்டும். நிறுத்தப்பட் டுள்ள வட்டியில்லா நகைக் கடனை மீண்டும் வழங்க வேண் டும். குடிமங்கலம் பகுதியில் நிறுத் தப்பட்டுள்ள மும்முனை மின்சா ரத்தை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டப்படி முன்னுரிமை அடிப்ப டையில் விவசாய வேலைகளுக் குத் தொழிலாளர்களை அனுப்ப வேண்டும் உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. இம்மாநாட்டில் சங்கத்தின் புதிய தலைவராக ஆர்.லட்சுமண சாமி, செயலாளராக வெ.ரங்க நாதன், பொருளாளராக ஏ.தங்க வடிவேலன், துணை தலைவ ராக எம்.சுந்தர்ராஜ், துணை செயலாளராக சி.ஜெ.ஸ்ரீதர் மற்றும் கமிட்டி உறுப்பினர் களாக 9பேர் தேர்வு செய்யப்பட் டனர்.