சென்னையில் உள்ள ராயபுரத்தில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,552 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,438 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 1,116 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28,694 ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 232 ஆக உயர்ந்துள்ளது. 15,762 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். சென்னையில் மொத்தமாக 19,826 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 178 பேர் உயிரிழந்துள்ளனர்; 10,156 பேர் குணமடைந்துள்ளனர்.
சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 3,552 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 38 பேர் உயிரிழந்துள்ளனர். தண்டையார்பேட்டையில் 2,470 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 21 பேர் உயிரிழந்துள்ளனர். கோடம்பாக்கத்தில் 2,202 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 12 பேர் உயிரிழந்துள்ளனர். தேனாம்பேட்டையில் 2,245 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 27 பேர் உயிரிழந்துள்ளனர். திரு.வி.க நகரில் 1,958 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 30 பேர் உயிரிழந்துள்ளனர். அண்ணா நகரில் 1,784 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 17 பேர் உயிரிழந்துள்ளனர். அடையாரில் 1,094 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 9 பேர் உயிரிழந்துள்ளனர்.