tamilnadu

img

ரில் மூழ்கி உயிரிழந்தவர்களுக்கு அரசு நிவாரண நிதி வழங்க கோரிக்கை

ரில் மூழ்கி உயிரிழந்தவர்களுக்கு   அரசு நிவாரண நிதி வழங்க கோரிக்கை 

திருவள்ளூர், மே 7- திருவள்ளூர்,  கும்மிடிப்பூண்டி, திருக்கண்டலம்,  மோரை ஆகிய பகுதி களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்க ளுக்கு உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசு முன் வர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூரில் அகோபிலம் மடத்திற்கு சொந்தமான கோவில் குளத்தில்  செவ்வா யன்று (மே 6), மூன்று வேத பாட சாலை மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில் புதனன்று (மே 7) சிறு பான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் நாசர் வீர ராகவர் கோயில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 வேத பாடசாலை மாண வர்களின் குடும்பத்தினரை சந்தித்து நிவா ரண உதவிகளை வழங்கினார். அதே போன்று திருக்கண்டலம் கொசஸ்தலை ஆற்றில் குளித்த போது உயிரிழந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் இரு மாணவர்கள்  குடும்பத்திற்கும்,  கிருஷ்ணா கால்வாயில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சமையல் எரி வாயு சிலிண்டர் போடும் இளை ஞரின் குடும்பத்திற்கும், மோரை கிரா மத்தில் உயிரிழந்த 2 பெண்கள் குடும்பத்திற்கும்,  கும்மிடிபூண்டியில் சர்வீஸ் சாலையில் விபத்தில் உயிரிழந்த சோழியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி மற்றும் ஆதரவற்ற நிலையில் உள்ள அவர்களது 4 குழந்தைகளுக்கும்  தமிழக அரசு நிவாரணம் வழங்க  முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.