சென்னை மாநகராட்சியின் 49ஆவது மேயராக ஆர்.பிரியா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேயருக்குரிய ஆடை, அணிகலன்களை அணிந்த ஆர்.பிரியாவை, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர் பாபு ஆகியோர் அழைத்து சென்று மேயர் இருக்கையில் அமர வைத்து, செங்கோலை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.