tamilnadu

img

பொங்கல் சிறப்பு ரயில்.... நாகர்கோவில், கோவைக்கு இன்று முன் பதிவு.....

சென்னை:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து நாகர்கோவில், கோவைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

வருகிற 12, 13 ஆம் தேதிகளில் இரவு 10.30 மணிக்கு சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. 16, 17 ஆம் தேதிகளில் மதியம் 2.45 மணிக்கு நாகர்கோவிலிலிருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.இதேபோல் வருகிற 11 ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு சிறப்பு ரயில் சென்னையிலிருந்து கோவைக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் 17 ஆம் தேதி இரவு 8 மணிக்கு கோவையிலிருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்.பொங்கல் சிறப்பு ரயில்களுக் கான முன்பதிவு ஞாயிறன்று (ஜன.10) காலை 8 மணிக்கு தொடங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. அதன் பின் தளர்வுகள் அளிக்கப்பட்டு ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.வெளி மாவட்டங்களுக்கு ரயில் கள் இயக்கப்பட்டாலும் முழு அளவில் இன்னும் ரயில் சேவை தொடங் கப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

;