சென்னை, மார்ச் 24- நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து தமிழ்நாட்டின் 38வது மாவட்டமாக மயிலாடு துறை மாவட்டம் உருவாக்கப்ப டும் என்று செவ்வாயன்று(மார்ச் 23) தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் செவ்வா யன்று நிறைவு பெறுவதை யொட்டி பேரவை விதி 110-ன்கீழ் அறிக்கை ஒன்றை வாசித்த முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி, “கொரோனா வைரஸ் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல், சார்ஸ் போன்ற தொற்று நோய்களை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் மாநில அளவிலான தனி மைப்படுத்தப்பட்ட மருத்துவ மனையாக தாம்பரம் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை மாற்றப்பட்டுள்ளது. மேலும், 3 மண்டல அளவி லான தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனைகளாக மதுரை தோப்பூர் அரசு காசநோய் மருத்து வமனை, கோவை அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனை, தஞ்சை செங்கிப்பட்டி மகாத்மா காந்தி நினைவு காசநோய் சான டோரியும் ஆகிய மருத்துவ மனைகளும் சென்னை கிண்டி கிங் நோய் தடுப்பு மருந்து நிலை யத்தில் உள்ள ஆய்வகத்தை மேம்படுத்தவும் ரூபாய் 110 கோடி செலவிடப்படும்”என்றார். ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளை உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள துரித மாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு ரூபாய் 10 கோடி செலவில் வான் வழி அவ சரகால சேவை தொடங்கப்படும் என்றும் முதலமைச்சர் கூறினார்.
வெண்கல சிலை...
வீரபாண்டிய கட்டபொம்மன் தன் தளபதியாக மட்டுமல்லாமல் மகனாகவும் நினைத்து போற்றிய நெல்லை சீமை தந்த தீரமிக்க சுதந்திரப் போராட்ட வீரர் வெள்ளையத்தேவன். அவர் வாழ்ந்த தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் அமைந்துள்ள அவரது மணிமண்டபத்தில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்படும்.
பத்திரிகையாளருக்கு ரூ. 2 லட்சம்...
பணிக்காலத்தில் பத்திரிகை யாளர்கள் கடுமையான நோயி னால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும்போது பத்திரிகையாளர் நல நிதியத்தி லிருந்து வழங்கப்பட்ட மருத்துவ நிதி ஒரு லட்ச ரூபாயில் இருந்து இரண்டு லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொடர் பூங்காவில் முதற்கட்டமாக 650 ஏக்கர் நிலப் பரப்பில் மருத்துவ மூலப் பொருள் மற்றும் மருந்து உற் பத்தி நிறுவனங்கள் தொடங்கு வதற்கு எதிர்பாராத மருந்தியல் தொழிற்பூங்கா 1 சிப்காட் நிறுவ னத்தால் ரூபாய் 770 கோடியில் தொடங்கப்படும் என்றும் தூத்துக்குடி மக்களால் மக்களின் தந்தை என அழைக்கப்பட்ட ராவ் பகதூர் குரூஸ் பர்டணாந்தீஸ் சேவையைப் போற்றும் வகை யில் அவரது பிறந்த நாளான நவம்பர் 15 அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்ப டும் என்றும் பாளையங்கோட்டை சாலையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி கூறினார்.