சட்டவிரோத விளம்பரப் பலகைகள், கட்-அவுட்கள் வைப்பதை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து பதில் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
சட்ட விரோதமாக விளம்பரப் பலகைகள் வைப்பதை தடுக்க மாநில அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் என்னென்ன நடைமுறைகளைப் பின்பற்றுகின்றன, என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொண்டனர் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இது கறித்து தமிழ்நாடு அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
விதிமீறியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை விட, சட்ட விரோதமாக விளம்பரப் பலகைகள் வைக்கப்படுவதை தடுப்பதே முக்கியமானது” என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோத விளம்பரப் பலகைகளை தடுக்க கோரிய வழக்கை நவ.7-ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.